×

மயிலாப்பூரில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் பால்ராஜ் என்பவர் அரிசி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து தனது கடையை பூட்டிவிட்டு அருகில் உள்ள வீட்டிற்கு பால்ராஜ் சென்றுவிட்டார். பிறகு இன்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனே கடைக்குள் சென்று பார்த்த போது, கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.4 லட்சம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து பால்ராஜ் மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், டாக்டர் ரங்கா சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்….

The post மயிலாப்பூரில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Mylapore ,Chennai ,Balraj ,Dr. Ranga Road, Mylapore, Chennai ,
× RELATED சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம்...